புனித பூமியில் ஒரு மனித அவலம்

நத்தார் தினம் உலகம் முழுவதும் கொண்டாடி ஓய்ந்தாகிவிட்ட போதிலும் இறைமகன் யேசு பாலன் பிறந்த பூமி இம்முறை நத்தார் பரிசுகளை பலஸ்தீனத்திற்கு வழங்கத் தீர்மானித்தது.

ஆம் பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் வலிதாக்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.700ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

இதுவரை வான்வெளிதாக்குதல்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய துருப்புகள் விரைவில் தரைப்படைகள் மூலம் காசா பகுதியை நோக்கி முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரித்துள்ளன.

காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளின் நிலைகள் மீதே தாக்குதல் நடத்தி வருவதாக வழமைபோல இஸ்ரேலும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளன.

குhசாவில் உள்ள பள்ளி வாசல் மீது இஸ்ரேலிய உலங்கு வானூர்திகள் நடத்திய தாக்குதலில் 5 இளம் பெண்கள் பலியாதை தான் நேரில் கண்டதாக காசாவில் செயல்பட்டு வரும் தன்னாhவ பணயியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்

இஸ்ரேலிய விமானாத் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்ப எகிப்பதிய எல்லை நோக்கி ஓடிய பொதுமக்களi எகிப்திய படைகளின் சுடுகலன்கள் தான் வரவேற்றுள்ளன.
ஏகிப்பதிய படைகளின் தாக்குதலில் தஞ்சம் கேட்டு ஒடிய பொதுமகன் ஒருவர் பரிதாபகரமாக செத்து விழ ஏனையவர்கள் மீண்டும் காசா நோக்கி திரும்பி சென்றுள்ளனர்.

தந்போது எங்கும் தப்பிச் செல்ல முடியாத மக்கள் சாலை அணைக்க காத்திருக்கின்றார்கள்.


வழமைபோலவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை காசாவில் அனைத்து விதமான வன்முறைகளையும் முடிவிற்கு கொண்டு வருமாறு “எல்லோருக்கும்” அனுப்பி வைக்கும் கோரிக்கையை அனுப்பி விட்டு அமைதியடைந்திருக்கின்றது.

செத்துப்போகின்றவர்கள் அமெரிக்கர்களாக அல்லாதவிடத்து கடுமையான நடவடிக்கைகள் எவையும் எங்கும் எடுக்கப்படமாட்டாது என்ற உலக பொதுவிதிக்கு அமைவான நடவடிக்கை தான் இது என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த சனிக்கிழமை முதல் காசாவில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் 110 உந்துகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது ஆனால் அதில் ஏற்பட்ட சேதங்கள் எவையும் வெளியாகவில்லை.

6 மாதங்கள் அமைதி காத்த அமைதி ஒப்பந்தம் காலவதியாகி ஒருவாரத்தினுள் இத்தனை அனர்தங்களும் அங்கு நடந்தேறியிருக்கின்றன.

24 மணித்தியாலத்தில் அடையாளம் காணப்பட்ட 210 இலக்குகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

ஹமாஸ் எதிர்பாரத பொழுதில் அதன் தலைமையகம் மீது அதிர்ச்சி தாக்குதல் நடத்தியுள்ளோhம் இது வெறும் ஆரம்பம் தான் களநலவரங்களின் போக்கிற்கு அமைவாக போரியல் யுக்திகள் மாறுபடும் ஹமாhஸ் இயக்கம் அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் லிவ்னி கூறியுள்ளார்.


இஸ்ரேலுடனான மோதலட தவிர்ப்பு ஒப்பந்தம் காலவதியானதை தொடர்ந்து ஹமாஸ் போராளிகள் வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்தமையே இந்த அவல நிலைக்கு காரணம் என்பதனை கண்டறிந்த அமெரிக்கா இதனை கண்டிப்பதாக அறிக்கை வெளயிட்டுள்ளது.

காசவில் உள்ள பலஸ்தீன மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அவர்களுக்கும் தமக்கு எந்தவிதமான பகையுமில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் ஏகூட் ஒல்மட் அறிவித்துள்ளார்

பலஸ்தீன மக்களை ஹமாஸ் அமைப்பு கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும் எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தாங்கள் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.(அங்கேயுமா ?)

1967ல் ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்றான ஆவல் இன்னும் இஸ்ரேலிடம் இருந்து விலகவில்லை. பலஸ்தீன விடுதலைப் போராட்டம் ஏன் ?எதற்கு ? எப்படி ? விரைவில்

Comments

Popular posts from this blog

யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம்... !

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...