Posts

Showing posts from July, 2009

பன்னிரண்டாவது வருடத்தில் சூரியன்....

Image
நேற்று போல் தான் இருக்கின்றது ஆனாலும் 11 வருடங்கள் உருண்டோடி முடிந்து விட்டது.சூரியன் தனது ஒலிக்கரங்கள் கொண்டு தமிழ் பேசும் நெஞ்சங்களை அரவணைக்க ஆரம்பித்து 11 ஆண்டுகள் நிறைவடைகின்றது. எத்தனை சாதனைகள் எத்தனை வேதனைகள் அத்தனையும் தாண்டி இன்றும் மக்கள் மனங்களில் தனித்துவமான அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கின்றான் சூரியன். உலக வர்த்தக மையத்தின் 35வது தளத்தில் இருந்து இலங்கை முழுவதற்கும் தமிழ் பரப்பும் வானொலியின் 11 வருடம் என்பது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் பெருமை கொள்ளத்தக்கது.இலங்கையின் முதன் முதலாக 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பை ஆரம்பித்த தனியார் ஒலிப்பரப்பு ஊடகம் சூரியன். வானொலி மீதான மக்களின் அவதானிப்பு குறைவாக இருந்த காலத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது சூரியன் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.வானொலிக்கென வகுக்கப்பட்ட சம்பிரதாயங்களை உடைத்து ஒரு மாற்றத்தை தமிழ் ஊடகப் பரப்பில் ஏற்படுத்திக் காட்டியது சூரியன். தமிழ் ஒலிபரப்பு துறையின் தாயகமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல வருடங்கள் பணியாற்றிய பழுத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் தலைமையில் புதிய இளைஞர்கள

ஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 05

Image
சூரியன் செய்திகளும் நானும். அறிவிப்பாளன் என்ற நிலையில் இருந்து என்னை ஒலிபரப்பு ஊடகவியலாளனாக்கிய இடம் சூரியனின் செய்திப்பிரிவு. எனது ஊடகத்துறை ஆற்றல்களை இனம்கண்டு அவற்றை புடம் போட்டது இந்த இடம் தான். இன்றும் ஒலிபரப்பு ஊடவியலாளனாய் நான் பணியாற்றுவதற்கு காரணம் சூரியன் செய்திப்பிரிவு எனக்கு வழங்கிய பயிற்ச்சி தான். ஊடகத்துறையில் எனக்கு அகரம் சொல்லிக் கொடுத்த பள்ளிக்கூடம் அது.செய்தி வாசிப்பாளனாக மட்டும் என்னை கருதாது தங்களில் ஒருவனாய் கருதிய சூரியன் செய்திப்பிரிவனருக்கு என்றும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தடையவை. தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செய்திகளுக்காகவே சூரியன் பிரபல்யம் பெற்றிருந்ததை எவரும் மறந்திருக்க முடியாது. அந்த வேளையில் முக்கியம் மிக்க செய்தி அறிக்கைகளில் ஒன்றான சூரியனின் இரவுச் செய்திகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. இலங்கை முழுவதிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் பரவலான அவதானிப்பை நான் பெறுவதற்கு சூரியனின் இரவுச் செய்திகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை தான் காரணம் அந்த வாய்ப்பினை எமது நிகழ்ச்சி பொறுப்பதிகாரி நடா அண்ணா. அந்த வாய்பை உரிய முறையில் பயன்படுத

பதிவின் பதிலும் பதிவும் - இசையமைப்பாளர் ராஜின் எண்ணங்கள்

Image
இன்று சூரியனில் எனது ஆரம்ப நாட்கள் நிகழ்ச்சி மாற்றங்கள் சூரியனின் ஆரம்ப கால அறிவிப்பாளர்கள் பற்றிய ஒரு பதிவினை எழுதவதற்கு தீர்மானித்திருந்தேன். எனினும் ராஜ் எழுதிய 3 தொடர் பின்னூட்டங்கள் அந்த எண்ணத்தை மாற்றி விட்டன. எனது அனுபவங்கள் மற்றும் ஆதங்கங்கங்களை பகிர்ந்து கொள்வதற்காக தான் இந்த பதிவு தொடரை ஆரம்பித்தேன். அதில் எங்கள் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதமைக்கான காரணங்கள் என என் மனதில் பட்டவற்றை பதிவு செய்தேன். அந்த பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் லோசனும் நடைமுறை சவால்கள் குறித்து பின்னூட்டமிட்டடிருந்தர். இது குறித்து இசையமைப்பாளர் ராஜ் தனது எண்ணங்களை நீண்ட பின்னூட்டமாக வழங்கியிருக்கின்றார். அதனை பின்னூட்டமாக வைத்திருப்பதை விடவும் பதிவாக்குதல் பொருத்தமானது என்று கருதுகின்றேன். பின்னூட்டங்களை பார்க்க தவறியவர்களுக்காக.. இனி ராஜின் கருத்துக்கள்... எல்லோருக்கும் எனது நன்றிகள் :) ரமணன் , லோஷன் ... இந்த வாதத்தில் நானும் எனது கருத்துகளை பரிமாற்ற விரும்புகிறேன் . சரியா ,தவறா என்று எனக்கு தெரியாது .. இது எனக்குப் பட்டது ... //முடியுமானவரை உள்ளூர் பாடல்களை வழங்கினாலும் எதிர்பார்த்தளவு

ஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 04

Image
அன்புள்ள நண்பரே நான் சூரியனில் இணைந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது. சூரியனில் அறிவிப்பாளராவதற்கு சில மாதங்கள் முன்பாக ஒரு இரவுப் பொழுதில் ரவூபின் நேற்றைய காற்றை கேட்டு முடித்த பின் முகுந்தனும் சர்தாரும் தொகுத்தளித்த அன்புள்ள நண்பரே நிகழ்ச்சியை எதேச்சையாக கேட்க நேர்ந்தது. அன்று படித்துச் சுவைத்த அம்சங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். பல முறைகள் முயன்று நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில நிமிடங்கள் முன்பாக அழைப்பு கிடைத்தது. மறு முனையில் முகுந்தன் என்ன சொல்லப் போகின்றீர்கள் ? ஒரு கடி ஜோக் கொஞ்சம் பெரிய ஜோக் சொல்லவா சரி என்று அழைப்பை வானொலிக்கு மாற்றினார். உங்கள எல்லோருக்கும் தெரிந்த நகைச்சுவை தான் இருந்தாலும் ..மீண்டும் ஒரு முறை எனக்காக ஒரு ஒட்டகச்சிவிங்கியை; மூன்று படிமுறைகளின் மூலம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும் .. முகுந்தன் - தெரியாது நீங்களே சொல்லுங்கள்நான் - படி ஒன்று – குளிர்சாதனப் பெட்டியின் கதவை திறத்தல் படி இரண்டு – ஒட்டகச்சிவிங்கியை உள்ளே வைத்தல் படி மூன்று – குளிர்சாதனப் பெட்டியின் கதவை மூடுதல் முகுந்தன் - இதில் என்ன கடி இருக்கின்றது.. நான் - இன்னும் கதை

ஓலிவாங்கியால் எழுதும் என் கதை பாகம் 03

Image
ஓவ்வொரு இனமும் தமக்கான அடையாளங்களை இழந்து விடக் கூடாது என்பதில் அதிக அக்கறை உடையவன் நான்.அந்த வகையில் எங்கள் நாட்டில் கிடைக்கும் குறுகிய வளங்கள் மற்றும் வாய்ப்புகளின் ஊடே தங்கள் கலை தாகத்தை தீர்க்க முயலும் நம்மவர்களுக்கு உரிய வாய்ப்புகளை நம் நாட்டு ஊடகங்கள் வழங்க வேண்டும் என்பது அன்றும் இன்றும் எனது எதிர்பார்பு. இந்தியாவில் உள்ள ஒரு மிகப்பெரும் நிறுவனம் மேற்கொள்ளும் முதலீட்டில் உருவாகும் திரைப் படத்தில் யாரோ எழுதி யரோ மெட்டமைத்து யாரோ பாடும் பாடலை நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு ஒலிபரப்பி இந்த பாடலை முதலில் தந்நதது நாங்களே என்ற வரிகளை இடைச்செருகி நாங்கள் போடும் கூத்துக்கள் அருவருப்பானவை இதனை நானும் விதிவிலக்கின்றி செய்திருக்கிறேன் என்பது கசப்பான உண்மை. இப்படியாக தென்னிந்திய திரைப்பட பாடல்களுக்கு நாங்கள் கொடுக்கும் அதி முக்கியத்துவத்தின் சிறு பகுதியை கூட எங்கள் நாட்டு கலைஞர்களுக்கு நாங்கள் வழங்க தவறி விடுகின்றோம்.எங்காவது ஒரிண்டு பேர் தமக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் மூலம் அணுகினால் ஏனோ தானோ என்று அவர்களின் பாடல்களை ஒலிபரப்பி அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதோடு எங்கள் கடமைகளை மு

ஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 02

Image
எனது வானொலி அனுவங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த வலைத்தளத்தை பதிவு செய்தேன் ஆனாலும் நேரமின்மை காரணமாக அதனை உரிய வகையில் இதுவரை மேற்கொள்ள முடியவில்லை ஆனாலும் இப்போது என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கிடைத்த இந்த இடைவெளியில் இதனை நிறைவேற்ற முடியும் என்று நம்புகின்றேன். 10 வருடங்களாக வானொலி ஊடகத்துறையில் பயணிப்பவன் என்ற வகையில் எனது அனுபவங்களை தொடர்ந்து 10 பதிவுகளில் வலையேற்ற எண்ணியுள்ளேன். ஓலிபரப்பு துறையில் சூரியன் தான் எனது தாய்வீடு 1999 முதல் இன்று வரை ஏதோ ஒருவிதத்தில் சூரியனோடு என்னை அடையாளப்படுத்தியே வருகின்றேன். என்னை ஒலிப்பரப்பாளனாக்க முடியும் என்று நம்பிய எனது ஒலிபரப்பு ஆசான் திரு.நடராஜயசிவம் இன்றும் என்றும் மரியாதைக்கும் நன்றிக்கும் உரியவர். அவரால் ஒலிபரப்புதுறை வாய்ப்பு அன்று வழங்கப்படாதிருந்தால் எனது வாழ்வே மாறிப்போயிருக்கும். இப்போது எங்காவது ஒரு நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்திருப்பேன். வாழ்வின் சுவாரசியமான பல பக்கங்களை எனக்கு ஊடகத்துறை அறிமுகப்படுத்தியது. எனது சமகால அறிவிப்பாள்களுக்கு கிடைக்காத பல வாய்ப்புகளை சூரியனில் நான் அனுபவித்தமைக்கு திர