Posts

Showing posts from November, 2009

சத்தம் இன்றி ஒரு புரட்சி – பரியோவான் கல்லூரி சாதனைகளின் சிகரத்தில்

Image
இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தம் ஏற்படுத்தி நிற்கும் காயங்கள் ஆறுவதற்கு காலங்கள் பலவாகும். யுத்தத்தை நேரடியாக தரிசித்த சுமார் மூன்று இலட்சம் உறவுகளிடம் சொல்வதற்கு கதைகள் ஏராளம் இருக்கும் அவை காலத்தின் காதுகளில் எப்போது சொல்லி வைக்கப்படும் என்பது உங்களை போலவே எனக்கும் தெரியாதது தான்… ஆனால் இழப்புகளில் இருந்து மீண்டெழும் மந்திர வித்தை தெரிந்தவர்கள் நாங்கள்.எங்களை சுற்றியுள்ள தடைகள் தகரும் போது நாங்கள் இழந்த வாழ்வை மீண்டும் பெறமுடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைகள் எங்களிடம் நிறையே உண்டு. அதுவரைக்கும் உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக வேண்டியது எங்களின் கட்டாய கடமை. இது அது போன்ற ஒரு காயத்திற்கு மருந்தாகும் முயற்ச்சி பற்றியதான கதை தான் இது. யாழ்ப்பாணத்தின் கல்வி சமூகத்தின் வளர்ச்சியல் தவிர்க்க முயடிhத அங்கங்களில் ஒன்று புனித பரியோவான் கல்லூரி. யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் பாடசாலைகளில் மிக முக்கியமானது இந்த கல்லூரி. தேசங்கள் தாண்டியும் தமிழர்களின் திறமைகள் பரவும் வழி வகை செய்து நிறகின்றது இந்த பாடசாலை. ஆளுமை மிக்க மனிதர்களை உற்பத்தி செய்தும் ஒரு உற்பத்தி சாலை எ

மீண்டும் வாழ்வோம்….

அடிக்கடி வலைப்பூவின் பக்கம் என்னை எட்டிப்பார்க்க விடாமல் செய்யும் வேலைப் பழுவின் பெயர் தான் “மீண்டும் வாழ்வோம்”. மீண்டும் வாழ்வோம் எனக்கு சுகமான ஒரு சுமை.கடந்த இரண்டு வருடங்களாக நான் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான ஊடக செயல்பாடு தான் இந்த மீண்டும் வாழ்வோம். கண்ணீரும் வேதனைகளும் சொந்த மண்ணியின் துயர நினைவுகளும் சுமந்து இடம்பெயர்ந்த எங்கள் உறவுகளின் துயர் துடைக்கும் ஒரு சிறு முயற்ச்சிதான் இந்த மீண்டும் வாழ்வோம். இந்த திட்டம் பற்றி நிறையவே பதிவுகளில் எழுத வேண்டும் என்று எத்தனையோ தடவைகள் முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது. இம்முறை இதனை எப்படியேனும் ஒரு பதிவேனும் உறுதியுடன் தான் இதனை தட்டச்சுகின்றேன். அமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இன்ரநியுஸ் நெட் வேர்க் எனப்டும் அரச சார்பற்ற அமைப்பினால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. வாராந்த பத்திரிகை மற்றும் தினசரி வானொலி நிகழச்சிகளென இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக தளங்களில் ஒன்றாக பயணிக்கும் வாய்ப்பினை இந்த திட்டம் வழங்கியுள்ளது. ஓலிபரப்பு ஊடகவியலாளனாய் என்னை வளப்படுத்தவும் இதழியல் துறையின் அறிவினை பெறவும் இது துணை செய்கின்றது