Posts

யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம்... !

Image
  யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம் என்றார் மாவோ. தமிழர்கள் இன்று சந்தித்திருப்பதும் ஒரு யுத்தம் தான். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த அரசியல் யுத்தத்தை எதிர் கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்குள் நாம் தள்ளப்பட்டு கிடக்கின்றோம். போரில் உங்களை ஒரு முறை மட்டுமே கொல்ல முடியும். அரசியலில் நீங்கள் பலமுறை கொல்லப்படுவீர்கள் என்று வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முறை சொல்லியிருக்கின்றார். தமிழ் மக்களின் தற்போதைய நிலையும் அது தான் 2009 ஆயுதப் போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் நாம் பல தடவைகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பில் இருப்பது தான் 13வது அரசியலமைப்பு அதனை நடைமுறைப்படுத்துவது என்பது அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் கடமை. ஆனால் தற்போதுள்ள நிலையில் 13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதே மிகப்பெரிய சவால் என்றும் அந்த சாவலை எதிர் கொண்டு தாம் அதனை நிறைவேற்றி தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசகைளை நிறைவேற்றி வைக்கப் பாடுபடுவதாக மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடகம் போடுகின்றார். இது நாடகம் தான் என்று தெரிந்தும் ந

என்னத்த சொல்ல... வட போச்சே

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசனின் இலங்கை விஜயம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகப் பரப்பிலும் விவாதங்களையும் கேள்விகளையும் தோற்றுவித்துள்ளன. இது தனிப்பட்ட விஜயம் தான் பிறந்து வளர்ந்த மண்ணையும் தனது உறவினர்களையும் சந்திப்பதற்கான விஜயத்தையே தான் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மீள வலியுறுத்தியிருக்கின்றார். தன்னை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருப்பதான ஒரு செய்தி இறுதியாக வெளியாகியிருக்கின்றது.தான் கைது செய்யப்படவோ அல்லது நாடு கடத்தப்படவோ நேரிடும் என இலங்கை அதிகாரிகள் தம்மை அச்சுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதற்கு முன்னதாக அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  இவ்வாறான ஓர் நிலைமையை எதிர்நோக்க நேரிடலாம் என இலங்கை அதிகாரிகள் தமக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், வீட்டுக் காவலில் வைத்திருந்ததாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார். இலங்கை அதிகாரிகள் தம்மை வீட்டுக் காவலில் வைத்திருக்கவில்லை எனவும், எச்சரிக்கை விடுத்திர

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...!

Image
கனடாவின் முன்னாள் நீதி அமைச்சராக இருந்த Jody Wilson-Raybould இன் பதவி விலகல் கனடாவில் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. SNC-Lavalin என்ற பெரு நிறுவனம் தொடர்பில் எழுந்துள்ள சர்சைகளே இந்த பதவி விலகலுக்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. எரிசக்தி, மின் உற்பத்தி, அணு சக்தி. கட்டுமானம் ,பொறியியல் என பல துறைகளில் தடம் பதித்துள்ள இந்த நிறுவனம் பல நாடுகளில் மிகப் பெரும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 2017ம் ஆண்டு 9.3 பில்லியன் டொலர்கள் வருமானத்தை பெற்றுக் கொண்ட கனடாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் SNC-Lavalin ன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து அந்த நிறுவனத்தை பாதுகாப்பதற்கு லிபரல் அரசாங்கத்தின் முக்கிய தரப்புகள் முற்பட்டதாகவும் அதற்கு  முன்னாள் நீதி அமைச்சராக விளங்கிய இருந்த Jody Wilson-Raybould இணங்கவில்லை என்பதால் அவருடைய நீதி அமைச்சு பதவியினை அவர் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 1911 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 50,000 ற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். கனடாவின் கியுபெக்கை தலை

25 வருடங்கள்...நான் .. ஊடகம் .... இன்னும் சில...

Image
ஒலிபரப்பு ஊடகத்துறையில் என்கான வாசல்களை திறந்து வைத்த சூரியனுக்கு இன்று அகவை 21. இங்கு நான் கற்ற ஆரம்பக் கல்விதான இன்று வரை என்னை இயக்கி கொண்டிருக்கின்றது. அதனால் என்றும் என் நேசத்திற்குரிய வானொலிக்கு என் வாழ்த்துகள். இந்த நாளில் என்வாழ்வையும் திரும்பிப் பார்க்கின்றேன்.  25 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். 1993 ம் ஆண்டு அபர்ணாலாய என்ற இசைக் குழுவின் அறிவிப்பாளனாய் எனது ஊடகப் பயணம் தொடங்கியது.  இடம்பெயர்வுகள் புரட்டிப் போட்ட வாழ்கையில் தொலைந்து போன கனவுகளுக்கு மீண்டும் 1999ம் ஆண்டு புது வாசல் திறந்தது. என்றும் பெருமதிப்பிற்குரிய ஆசான் நடராஜசிவம் அவர்களால் ஒலிப்பரப்பாளன் என்ற அடையாளத்துடன் சூரியன் பண்பலை மூலம் முழு  நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. . ஒலிபரப்பாளன், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன். இந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழு

சீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி !!!

Image
பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.  இது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின

எங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது !

2009 பேரவலத்தின் முடிவில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வேறு தளங்களுக்கு நகர்த்தப்பட வேண்டிய நிலை உருவானது. ஆயுதப் போராட்டங்களின் மூலமாக தனி நாடு உருவாக முடியும் என்ற சித்தாந்தம் மாற்றமடைந்திருக்கும் அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் உலக நடைமுறையினை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த மூன்று தசாப்தகால போராட்டத்தில் எமக்கான தேசம் என்ற ஒற்றை இலக்கிற்காய் மடிந்து போனவர்களின் கனவுகளை அப்படியே தூக்கி எறிந்து விட்டு நாம் சென்று விட முடியாது. 2009 ற்கு முன்னர் விடுதலைப் போரின் ஆதரவுத் தளமாக இருந்த புலம்பெயர் தமிழர்கள் 2009 ற்கு பின்னர் விடுதலைக்கான முனைப்புகளின் முன்னிலைப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆதனால் தான் புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் அது சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை குலைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. ஆயுதப் போராட்டம் ஏற்படுத்த முடியாத நீண்டகால பேரழிவுகளை புலம் பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா அரசு நம்புகின்றது அ