Posts

Showing posts from 2014

எங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது !

2009 பேரவலத்தின் முடிவில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வேறு தளங்களுக்கு நகர்த்தப்பட வேண்டிய நிலை உருவானது. ஆயுதப் போராட்டங்களின் மூலமாக தனி நாடு உருவாக முடியும் என்ற சித்தாந்தம் மாற்றமடைந்திருக்கும் அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் உலக நடைமுறையினை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த மூன்று தசாப்தகால போராட்டத்தில் எமக்கான தேசம் என்ற ஒற்றை இலக்கிற்காய் மடிந்து போனவர்களின் கனவுகளை அப்படியே தூக்கி எறிந்து விட்டு நாம் சென்று விட முடியாது. 2009 ற்கு முன்னர் விடுதலைப் போரின் ஆதரவுத் தளமாக இருந்த புலம்பெயர் தமிழர்கள் 2009 ற்கு பின்னர் விடுதலைக்கான முனைப்புகளின் முன்னிலைப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆதனால் தான் புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் அது சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை குலைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. ஆயுதப் போராட்டம் ஏற்படுத்த முடியாத நீண்டகால பேரழிவுகளை புலம் பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா அரசு நம்புகின்றது அ

பனியில் தமிழ் எழுதி வெயிலில் வேகவிடும் ஒரு குரல்... !

Image
ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கிருக்கும் ஆனந்தம் அல்லது ஆணவம் என்பது நான் பேசும் நான் கேட்கும் நான் வாசிக்கும் மொழி சார்ந்தே தான் இருக்கின்றது. தமிழனின் அடையளம் "தமிழ்” என்பதாக மட்டுமே நான் பார்க்கின்றேன். எமக்கான பண்பாடு எமக்கான விழுமியங்கள் என பல கூறுகள் தமிழ் அடையாளம் கொண்டிருந்தாலும் மொழி தவிர்த்து அவற்றை சுமந்து செல்ல முடியாது என்பது தான் உண்மை. தமிழில் பேச முடியாத தமிழில் புரிதல் இல்லாத ஒரு  தலைமுறையோடு வாழும் வாழ்வு தான் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு வாய்திருக்கின்றது. இதனை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை எங்கிருந்து எப்படி யார் தொடங்குவது என்பது எங்கள் எல்லோர் முன்னாலும் இருக்கின்ற கேள்வி. எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் தமிழர்கள் தாம் பேசும் மொழியால் மட்டுமே தங்களுக்குள்ளான பிணைப்புகளை கொண்டிருக்க முடியும் என்று உறுதியாக நம்புகின்றேன். தமிழ் மொழியை பேசாத தமிழ் மொழி பற்றிய புரிதலும் அறிதலும் இல்லாவர்களை தமிழர்களாக கொள்வதில் அவர்களோடு தமிழினின் எதிர்காலம் குறித்து உரையாடுவதிலும் என்மனம் தடை கொள்கின்றது. தமிழைப் பேசத் தெரியாதவர்கள் தமிழில் வாசிக்க மு