Posts

Showing posts from 2010

ஒரு அழிவின் முடிவில் மறு அழிவின் ஆரம்பம்…

Image
யாழ்ப்பாணம் தமிழர்களின் கலாசாரத் தலைநகரம். மூன்று தசாப்த கால யுத்தத்தின் கோரங்களை இன்றும் சாட்சியங்களாகிக் கொண்டுள்ள நகரம். தனிப்பட்ட மற்றும் அலுவலகத் தேவைகள் கருதி யாழ் குடாவிற்கான நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் நான் வாழந்த சொந்த மண்ணில் இருந்து பிடுங்கி வீசப்பட்ட பின்னர் குறிப்பிடக் கூடிய வகையில் நீண்ட நாட்கள் அங்கு தரித்திருக்க கிடைத்த இந்த வாய்ப்பு இன்னும் சில காலத்திற்கு ஞாபகங்களை தாலாட்டும். பதினைந்து வருடங்களில் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடப்பட வேண்டியவை. வீதிகள் தோறும் மரங்கள் வளர்க்கின்றார்களோ இல்லையோ மரங்களை தறித்து அடுக்கி காவல் அரண்களை அமைக்க தவறவில்லை. யுத்தம் முடிந்து விட்டதற்கான எந்த சுவடுகளும் இன்றி இன்னும் யுத்தம் பற்றிய கவலைகள் மிச்சமிருக்கின்ற ஒரு பிரதேசமாகவே குடாநாட காட்சி தருகின்றது. வீதிகள் தோறும் காவலிருக்கும் பச்சை உடைக்காரர்களை காணும் போது ஆத்திரத்திற்கு பதிலாக கவலை படத் தோன்றுகின்றது. அவர்களை தாண்டிப் போவதற்கும் அவர்களின் பிரசன்னங்களை இட்டு கவலைப்படாதிருக்கவும்

மீண்டும் அரங்கேறும் மகாபாரதக் காட்சிகள்…

Image
“ தேர்தல்” இன்று இலங்கையில் வாழும் அனேகமானோரின் உரையாடல்களில் பரவிக்கிடக்கும் சொல் இது .”நம்பிக்கையான மாற்றமும்” “வளமான எதிர் காலமும்” குறித்த கனவுகளோடு நீலமும் பச்சையும் போர்திய மனிதர்கள் காத்துக்கிடக்கின்றார்கள். ஆனால் இந்த தேர்தல் அரிதாரங்கள் பூசாமல் எங்கள் உறவுகள் சொந்த மண்ணின் வாழ்விற்கான ஏக்கங்களுக்குள் முகம் புதைத்து நிற்கின்றனர். கொடுத்து சிவந்து போன கரங்களை கொண்ட வன்னி மண்ணின் மைந்தர்கள் இன்று அடுத்தவர்களின் ஒத்தழைப்புக்களை எதிர் பாத்து ஏங்கும் வாழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் இன்னும் சொல்லப்பாட பல சங்கடங்களும் சொல்ல முடியாத சங்கதிகளும் இந்த மக்களை பற்றி நிறைந்து கிடைகின்றது. ஆனால் இவற்றையும் தாண்டி இன்று இவர்களிடமே இரந்து யாசகம் கேட்கின்றனர் அவர்கள். இந்த நிலை பாரதப் போரின் இறுதி தருணங்களை ஏனோ ஞாபாகிக்க வைத்து விடுகின்றது. யுத்த களத்தில் கர்ணனை தனது சாணக்கியத்தால் சரித்து விட்டு பின்பும் அவன் உயிர்காத்து நின்ற அவனின் தர்மத்தை தானமாக பெற்று அவனை கொன்ற கண்ணனை போல் தமிழ் மக்களின் வாக்குகளிற்காக கையேந்தி நிற்கின்றவர்களை பார்க்கத் தோன்றுகின்றது

சூர்யோதயம் ..எண்ணங்களும் ஏக்கங்களும்

நட்சத்திர பதிவராக என்னை தெரிவு செய்த யாழ் தேவி குழுவினருக்கு முதலில் நன்றிகள். நேற்று இரவு யாழ் தேவிகட்கு உலவச் சென்ற போது தான் நான் நட்சத்திர பதிவரான விடயமே தெரியவந்தது. அதன் பின்னர் தான் மின்னஞ்சல் முகவரி தேடி திறந்த போது யாழ் தேவியினர் அனுப்பி வைத்த மின்னஞ்சல் காணக்கிடைத்தது. தினமும் ஏதாவது எழுத வேண்டும் என்ற அன்பு கட்டளை கூட அதன் பின்னர் தான் எனக்கு தெரியவந்தது அதனால் கடந்த இரு தினங்களாக நான் எதனையும் எழுதவில்லை பிழை பொறுத்தருள்க. சூரியோதயம்… (Sunshine) நண்பர் வியாசா கல்யாணசுந்தரம் கடந்த வருடம் ஆரம்பித்த ஒரு திட்டம் இது. கொழும்பில் வாழும் வசதி குறைந்த மாணவர்கள் சிலரை கல்விப் பொதுத் தராதர சாதரண தரப்பரீட்சைக்கு தயார் படுத்துவது தான் இந்த திட்டத்தின் முதல் படி. கடந்த வருடம் பல்வேறு சவால்களை தாண்டி அந்த திட்டம் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டது. மிகவும் இலகுவான ஒரு திட்டம் இது வருமானம் குறைந்த குடும்பங்களில் இருந்து கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக கல்வியை வழங்குவதன் மூலம் அவர்களின் பெறுபேறுகள

அரசியலாகும் விளையாட்டும் விளையாட்டாகும் அரசியலும்…

Image
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யவதற்கான தேர்தல் ஆரம்பித்துள்ளது.இதில் வேடிக்கை பார்க்கும் மன நிலை தான் தமிழ் மக்களிடம் பெரிதும் மேலோங்கி நிற்கின்றது. எமது இனத்தின் அவலங்களுக்கு காரணமான தலைவரும் தளபதியும் மோதிக்கொள்ளும் களம் எங்களை பார்வையாளர்களாக ஆக்கியுள்ளது. ஆனாலும் இலங்கையில் பிறந்தவர்கள் என்ற படியால் தமிழர்களான எமக்கு கிடைத்துள்ள ஆகக் கூடுதலான ஜனநாயக உரிமையைான (???) வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் இல்லாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழர்களின் வாழ்வியல் மீதான இலங்கையின் ஆட்சியாளர்களின் அத்துமீறல்கள் எதிரெதிர் துருவங்களாகிப் போனவர்களிடம் இருந்து மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன. எல்லாம் நடந்து முடிந்த பின்பும் எல்லாம் தெரிந்த பின்பும் அவர்கள் சொல்லும் அல்லது சொல்லப் போகும் மெய்களின் மீது எங்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. ஆனால் உலகம் உண்மையை உணர இது ஒரு வாய்ப்பாக அமையும் என்ற குறைந்த பட்ச ஆசை தான் இங்கு வாழும் தமிழர்களிடம் பரவிக் கிடக்கின்றது. அரசியல் என்பது பல வினளயாட்டுகளின் கலவையாகிப் போய் கிடக்கின்றது. தடைகள் பல த