மூட நம்பிக்கைகளின் உலகம்

என்ன தான் செவ்வாய்கிரகத்தில் ஆராச்சிகள் ஆரம்பித்திருந்தாலும் மூட நம்பிகைளிலும் சாத்திரங்களிலும் உலகம் கொண்டுள்ள நம்பிக்கை குறைவின்றி தொடர்கின்றது.

உலக வல்லரசுக்கான போட்டியில் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை உடைப்பதற்கு போராடும் சீனா பல முன்மாதிரிகளை உலகுக்கு தந்திருந்தாலும் மூட நம்பிக்கைகளிலும் தான் சளைக்கவில்லை என்று நிரூபித்து வருகினறது
சீனாவின் பெங் சுயி சாத்திர முறையில் இந்த வருடம் (2009)“எலி” வருடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த வருடம் “பன்றி” வருடமாம்.என்ன கொடுமை சார் இது.சீனர்களின் உணவில் அடங்காத வாயில்லா ஜீவன்களே இல்லை என்று பாhத்தால் அவர்கள் ஜாதகமே மிருகங்களிடம் தான் இருக்கின்றது

எருது,புலி,முயல்,ட்ரகன்,பாம்பு,குதிரை,ஆடு,குரங்கு,சேவல்,நாய்,பன்றி,எலி என 12 விலங்குகளின் பெயர்களில் சீனர்கள் தமது ஆண்டுகளை வகுத்துள்ளனர்.
இந்த வருடம் சீனாவிற்கு போகின்றவர்களுக்கு எலிக்கறி இலவசமா என்று என்னை கேட்டகாதீர்கள்.


எலி வருடம் பற்றி சுவாரசியமான அனுபவங்கள் இருக்கின்றன,இதற்கு முன்னை எலி வருடம் 1996ம் ஆண்டு.

அந்த ஆண்டில் 20 விமான விபத்துக்கள் உலகளாவிய ரீதியில் இடம்பெற்றிருக்கின்றனவாம் அதில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் விபத்துக்குள்ளாகி 230 உயிர்களை பறித்த போயிங் விமான விபத்தும் அடங்குகின்றது.

இதைவிட எலி நாட்கள் கூட முக்கியம் பெறுகின்றன 1920ம் ஆண்டு இடம்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிக்கப்படது ஒரு எலிநாளில் தானாம் அதேபோல் 2004ல் ஏற்பட்ட சுனாமியும் எலிநாளில் ஏற்பட்டதாக சீன சாத்திரம் கூறுகின்றது.

ஆக மொதத்தில் இந்த வருடம் எலி வருடம் நீராலும் இயற்கையின் சீற்றத்தாலும் பாரிய அழிவுகளை சந்திக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது
(ஐயோ இந்த வருடம் தண்ணியில கண்ணடம் என்று ரமணன் பதிலு போட்டிட்டான் இனி நான் குளிக்க மாட்டன் என்று யாரும் அடம் பிடித்தால் அடியேன் பொறுப்பல்ல}

இயற்கையின் சீற்றம் உக்கிரம் பெறும் என்பதற்கு “பெங் சுயி” தேவையில்லை.உலகம் வல்லாதிக்க போட்டியில் கொதித்துள்ளது போயிருக்கின்றது.ஆட்டிக் பனிப்பாறைகளின் உருகுதல் வேகம் அதிகரித்துள்ளது இதன் தாக்கம் இயற்கையின் சீற்றங்களாகாமல் என்னவாகும் ?
புவி வெப்பமடைதலில் ,சுற்றுச் சூழல் மாசடைதலில் சீனரின் பங்கு அனைவரும் அறிந்ததே.பூமிப் பாதுகாப்பு இயக்கங்கள் சீனாவில் ஒலிம்பிக் போட்டியை தடை செய்யுமாறு நடத்திய போராட்டங்கள் மறக்க முடியாதவை.

தனது அசுர வளர்ச்சிக்காக எல்லா நாடுகளும் இயற்கையை அழித்தே வருகின்றன.எனினும் சீனா தனது பெரும் பரப்பளவு மற்றும் சனத்தொகைக்கு அமைவாக அதில் முன்னிலை வகிக்கின்றது.



எலி வருடம் காரணமாக உலகின் பதற்ற நிலை இந்த வருடம் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்குமாம்.

இந்த பதிவை தட்டச்சிக் கொண்டிருக்கும் போது புதுவருட தினத்திலும் இஸ்ரேல் காசாவில் நடத்திய தாக்குதல்கள் தொடர்பான தொகுப்பு தொலைக்காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றது..

ஆதிக்க சக்திகளும் அவற்றின் மேய்ப்பர்களும் இருக்கும் வரை நானும் கூட சாத்திரம் சொல்லுவேன் உலகின் பதற்றம் பற்றி .

மிருக வருட ஒழுக்கின் ஆரம்பம் தான் “எலி”வருடம் எலியில் தொடங்கி பன்றியில் முடியும் ஒழுக்கின் ஆரம்பமாக இந்த வருடம் அமைந்துள்ளதால் உலகில் பல மாற்றங்கள் நிகழும் என்றும் அதன் அடிப்படையிலேயே அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பெங் சுயி வல்லுனரான ரேமண்ட் லோ கூறியுள்ளார்.

எனினும் சீனாவை பொறுத்த வரை வரலாற்றில் மிக முக்கிய வருடமாக இந்த வருடம் அமையும் என்றும் லோ சட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுடன் ஆரம்பித்துள்ள சீனாவின் பொருளாதார வளர்ச்சி இந்த “எலி”வருடத்தில் வரலாறு காணத உச்சத்தை அடையம் என்று அவர் எதிர்வு கூறியுள்ளார்.

எலிகாச்சலுக்கு இந்த ஆண்டாவது மருந்து கண்டு பிடிப்பார்களா என்று இங்கே ஏழை விவசாயி கேட்கும் கேள்வி யார் பதில் சொல்வது ?




அப்பாட புதுவருடத்தில் ஓருமாதிரி பதிவு போட்டுட்டன் இனி சந்தோ…..சமா நித்திரை கொள்ளலாம்

Comments

சீனர்களிடமும் மூட நம்பிக்கைகள் தாரளமாக உண்டு..Mid autumn festival எனப்படும் பேய்கள் திருவிழா எல்லாம் நடத்துவார்கள்..முன்னோர்களுக்கு காசு (போலி தான்)எல்லாம் எரிப்பதன் மூலம் அனுப்புவார்கள்

உங்களுக்கு என் இனிய புது வருட வாழ்த்துகள்
/
ஐயோ இந்த வருடம் தண்ணியில கண்ணடம் என்று ரமணன் பதிலு போட்டிட்டான் இனி நான் குளிக்க மாட்டன் என்று யாரும் அடம் பிடித்தால் அடியேன் பொறுப்பல்ல
/

:)))))
சீனாவின் பிரச்சிளையை விடுங்கோவன்.
நம்ம நாடு என்ன பாடு படப்போகுது என்டு சீனா சத்திரிமாரிடம் கேட்டு செல்லச் சொல்லுங்கோவன்..

Popular posts from this blog

யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம்... !

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...